22nd August 2022 18:46:24 Hours
குடாநாட்டில் சேவையாற்றும் சிப்பாய்களின் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம், ஒரு மாத கால ஆங்கிலப் பாடநெறியை நடத்தியது.
பிரதம அதிதியான யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்களின் தலைமையில் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.
பாடநெறியில் சிறந்த மாணவராக சாதாரண சிப்பாய் ஏ.பி.டி தே சில்வா தெரிவு செய்யப்பட்டதுடன், கோப்ரல் எம்.ஏ.என்.டி.பி ஜயசிங்க மற்றும் கன்னர் பி.எச்.கே பனாகொட முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
வெவ்வேறு படையணிகளின் முப்பத்திரண்டு சிப்பாய்கள் பாடநெறியை திருப்திகரமான முறையில் மேற்கொண்டனர். பாடநெறியில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழாவை வண்ணமயமாக்கின.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி , யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் விடுதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரிகள், அனைத்து படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.