Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2022 20:30:13 Hours

தந்திரிமலையில் ஏழை விதவை பெண்ணுக்கு இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில் ஊனமுற்ற முன்னாள் போர்வீரர்கள், வீரமரணம் அடைந்த முன்னாள் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், சேவையாற்றும் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மேலும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கெபிதிகொல்லாவவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது வீட்டினை கையளித்த பின்னர், இரண்டாவது திட்டமாக, இராணுவத் தளபதி, தந்திரிமலை, தெமடமல்கமவில் வசிக்கும் மேலும் ஒரு வறிய விதவை பெண்ணின் குடும்பத்திற்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை வழங்கி வைத்தார். 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர்களால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை படையணியின் படைத் தளபதி மற்றும் 5 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரிகேடியர் அனில் பீரிஸின் ஒருங்கிணைப்புடன், நன்கொடையாளரான திரு அஜந்த வாஸ் குணசேகர அவர்கள் மூலம் இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

வீடு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியும், இலங்கை தேசிய பாதுகாவல் படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, வன்னி பாதுகாப்பு தலைமையக தளபதி மற்றும் பிரிகேடியர் அனில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சமய சடங்குகளுக்கு மத்தியில் சுப நேரத்தில் அந்த புதிய வீட்டை இரணுவத் தளபதி திறந்து வைத்ததுடன், புதிய வீட்டின் திறப்பு பிரதம அதிதியினால் பயனாளிக்கு வழங்கப்பட்டது.

தந்திரிமலை தெமடமல்கம விதவை பெண்ணான திருமதி டி தினேஷிகா சிறிபால புதிய வீட்டின் சாவியை பெற்றுக்கொண்டார். இதற்கிடையில், திருமதி ஜானகி லியனகே அவர்கள் பயனாளிக்கு வீட்டு அத்தியாவசியப் பொருட்களைப் பரிசாக வழங்கினார்.

21 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை அன்புடன் வரவேற்றதன் பின்னர் அன்றைய தினம் பிரதம அதிதியாக மகாசங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவியை பயனாளிக்கு கையளித்தார்.

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்யங்க எரியகம, பாதுகாப்புக் கல்லூரியின் பிரதித் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், நிர்மாணப் பணிகளுக்குப் பங்களித்த சிரேஷ்ட அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் படையினர் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.