15th August 2022 17:10:56 Hours
படையலகுகளில் சேவையாற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி உறுப்பினர்களின் புத்தாக்கங்கள் மற்றும் குழு உணர்வுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், குழுப்பணி, தொழில்நுட்ப அறிவு, கழிவு மறுசுழற்சி, மின்னொட்டு, வர்ண பூச்சு மற்றும் தச்சு போன்றவற்றின் மூலம் புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு செயலமர்வு இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் கருத்தியல் ஆலோசனையின் பேரில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பல்நோக்கு மண்டபத்தில் ஆரம்பமானது.
திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கப் செயலமர்வின் நிறைவு விழா திங்கட்கிழமை (8) நடைபெற்றதுடன் இதில் கலந்து கொண்டு செயலமர்வை வெற்றிகரமாக முடித்தமைக்காக இருபத்தி எட்டு படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரதம அதிதி, 2022 ஜூலை 5 இல் தொடங்கிய பாடத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பல பாதுகாப்புப் படைத் தலைமையகங்களின் கீழ் தற்போது பணியாற்றும் தொண்டர் படையலகுகளின் பங்கேற்பாளர்களுக்கு நிறைவுரையினை வழங்கினார்.
பயிற்சி கண்காணிப்பாளர், பிரிகேடியர் நிர்வாகம், பிரிகேடியர் வழங்கல், கேணல் பயிற்சி மற்றும் கேணல் பொறியியல், அதிகாரிகள் மற்றும் இராணுவ தொண்டர் படையணி படையினர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.