06th August 2022 22:33:48 Hours
ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சல் ஜெனரல் எம்.ஆர்.டிபின், பி.ஆர் மற்றும் ஹம்பாந்தோட்டை துணைத் தூதரகத்தின் தூதுக்குழுவினர் வியாழன் (4) 12 வது படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது அவர்களை 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அன்புடன் வரவேற்றார்.
பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிரான இராணுவத்தின் தற்போதைய ஈடுபாடுகள், மக்களின் நல்வாழ்வுக்கான படையினரின் அர்ப்பணிப்பு, பசுமை விவசாயத் திட்டங்கள், தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை சுமூகமாக நடத்துவதற்கு அளிக்கப்படும் ஆதரவுகள் குறித்து படைப்பிரிவு தளபதி பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
துணைத் தூதரகத்தின் கொன்சல் அவர்கள் இராணுவத்தின் சேவைகளை வெகுவாகப் பாராட்டியதுடன் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக்களை பதிவு செய்துவிட்டு, இராணுவ மற்றும் சிவில் உறவுகளை வலுப்படுத்துவதில் 12 வது படைப்பிரிவின் அர்ப்பணிப்பையும் பாராட்டி சிறப்புக் குறிப்பையும் பதிவு செய்தார்.
இறுதியில், மேஜர் ஜெனரல் லங்கா அமரபால மற்றும் கொன்சல் ஜெனரல் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.