06th August 2022 22:15:48 Hours
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி இராணுவத்தில் இருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ள முன்னாள் காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக படையணி வளாகத்திற்கு வந்த மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, தனது படையணி ஸ்தாபகர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், கஜபா படையணி படையினரால் பாரம்பரிய இராணுவ பாதுகாவலர் அறிக்ககையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி படையணி பயிற்சி மைதானத்தின் சிறப்பு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாரம்பரிய இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு தனித்துவம் சேர்க்கும் வகையில், கஜபா படையணியின்படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வளாகத்தில் ஜெனரல் தம்மி ஹேவகே சிரேஷ்ட அதிகாரி ஓய்வு பெறுவதற்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்டார்.
மேலும், படையணி பேரவை உறுப்பினர்கள், படையணி நிலையத் தளபதி, பிரதி நிலையத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவு தலைமையகத்தின் அனைத்து படையினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.