04th August 2022 23:09:11 Hours
கடும் மழையினால் நோர்டன் பிரிட்ஜ் லக்ஷபான வரையிலான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதையடுத்து வீதியின் முழுப் போக்குவரத்தையும் தடை செய்த பாரிய மண் குவியல் 112 வது பிரிகேட் படையினரால் புதன்கிழமை (3) அகற்றப்பட்டது.
11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்களின் பணிப்புரைக்கு அமைய 112 வது பிரிகேட் தளபதி கேணல் சந்திம குமாரசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினர் விரைந்து இந்த அவசர தேவையை பூர்த்தி செய்தனர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, சிவில் அதிகாரிகளின் ஆதரவுடன் சாலை போக்குவரத்துக்கு சீர் செய்யப்பட்டது.