03rd August 2022 18:00:10 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 242 வது பிரிகேடின் கீழுள்ள 23 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால், ஜூன் 25 தொடக்கம் 27 வரையிலான காலப்பகுதியில் ருஹுணு மஹா கதிர்காமம் விகாரை திருவிழாவில் பங்கேற்பதற்காக கதிர்காமம் நோக்கி குமண மற்றும் யால தேசிய பூங்காக்கள் வழியாக பயணம் மேற்கொண்ட ஒகந்த விகாரை வளாகத்திற்கு வருகை தந்த ஏரக்குறைய 1500 பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டன.
24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சம்பத் பெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் அந்த பக்தர்களுக்கு ருசியான இரவு நேர உணவு மற்றும் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அறுகம்பையில் உள்ள 'பேவிஸ்டா' ஹோட்டலின் உரிமையாளர் திரு கெமுனு பெரேரா மற்றும் பிலியந்தலையில் உள்ள தொழிலதிபர் திரு. கமல் ஹரிஸ்சந்திர ஆகியோர் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கினர்.