03rd August 2022 18:30:10 Hours
வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 25 ஜூலை 2022 தனது கட்டளைப் பிரிவுகளின் கீழ் உள்ள படையலகுகளின் நிர்வாக விடயங்கள் தொடர்பான வழக்கமான நிர்வாக மாநாடு இடம்பெற்றது.
வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் கிளிஃபோர்ட் டி சொய்சா அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவ வழங்கள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன் அவர்கள் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இக்கலந்துரையாடலின் போது, உர உற்பத்தி, பசுமை விவசாயக் கருத்தின் முன்னேற்றம் மற்றும் ஏனைய முக்கிய நிர்வாக விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.
5 வது பொறியியலாளர் சேவை படையணி, 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி, 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, 5 வது இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி, 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் 4 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் அனைத்து கட்டளை அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.