03rd August 2022 18:51:10 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழுள்ள 111 வது பிரிகேடின் 83 இற்கும் மேற்பட்ட படையினர் திங்கட்கிழமை (1) மத்திய மாகாணத்தில் உள்ள இலங்கை வங்கியின் பிரதான கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம் வழங்கும் திட்டத்தின் போது, இரத்த தானம் வழங்க முன்வந்தனர்.
11 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 111 வது பிரிகேட் தளபதி ஆகியோர் இலங்கை வங்கி கண்டி கிளை வளாகத்தில் நடைபெற்ற ஏற்பாட்டில் கலந்துகொள்ளுமாறு தமது படையினருக்கு பணிப்புரை விடுத்தனர்.
கண்டி இரத்த வங்கிக்கு சத்திரசிகிச்சைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக அதிகளவு இரத்த சேமிப்புக்கள் தேவைப்படுவதால், தேவையின் மனிதாபிமானத் தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் படையினர் தமது இரத்தத்தை தானமாக வழங்கினர்.