02nd August 2022 20:30:23 Hours
அண்மையில் பதவி உயர்வு பெற்ற இலங்கை பீரங்கி படையணியின் 55 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) பனாகொட பீரங்கி படையணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் தலைமையகத்தை வந்தடைந்தவுடன் அவருக்கு இராணுவ மரியாதையை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வருகை தந்த தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் இராணுவ சம்பிரதாயமான இராணுவ அணிவகுப்பு மரியாதை தலைமையகத்தின் படையினரால் தளபதிக்கு வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளும், பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
4 வது இலங்கை பீரங்கி படையணியின் வளாகத்தில் அனைத்து படையினருக்கமான மதிய நேர உணவிலும் தளபதி கலந்து கொண்டதை தொடர்ந்து படையணியின் நிலையத் தளபதி, அனைத்து அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவின் படையினர் சார்பாக, புதிதாக பதவி உயர்வு பெற்ற தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசும் வழங்கினார்.