Header

Sri Lanka Army

Defender of the Nation

01st August 2022 23:38:10 Hours

படையினரால் பொதுமக்களின் போக்குவரத்து வீதி சீரமைப்பு

581 வது பிரிகேடின் 58 வது படைப்பிரிவின் கீழுள்ள 5 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் இன்று (1) மாலை ரன்வந்தென்ன - மாகந்துறை கொத்மலை புதிய நகருக்கு அருகில் உள்ள தவளம்தென்ன பகுதி இடையிலான வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த 120 பொதுமக்களை மீட்டுள்ளனர்.

கொத்மலை, தவளந்தென்ன பகுதியில் உள்ள இந்த மலைப் பிரதேசத்தில் பெய்த கடும் மழையினால் பிரதான வீதியில் மண் மேடுகள் சரிந்து விழுந்ததால் பிரதான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாலையின் இருபுறமும் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த இராணுவத்தினர், மண் மேடுகளை நகர்த்திய பின் போக்குவரத்தை எளிதாக்கினர்.