Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2022 18:28:14 Hours

கஞ்சா பயிர்ச்செய்கை சுற்றி வளைப்பு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 18 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 12 வது படைப்பிரிவின் புலனாய்வுப் படையினர், குடாஓயா பொலிஸாருடன் இணைந்து பலஹருவ பகுதியில் சனிக்கிழமை (23) ஊவக்குடா ஓயாவில் இரண்டு கஞ்சா பயிர்ச் செய்கைகளை முற்றுகையிட்டு அவற்றை அழித்துள்ளனர்.

சுமார் 32,000 கன்றுகளுடன் அந்த சட்டவிரோத பயிர்ச்செய்கைகள் காட்டுப் பிரதேசத்தில் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு படையினர் ஆதரவு வழங்க வேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, அவர்கள் பொலிஸாருடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு தனது படையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.