25th July 2022 18:08:42 Hours
வசந்திபுரம் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு சமூக நலத் திட்டமாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேட் படையினர் ஒன்றிணைந்து சுமார் 7500/= பெறுமதியான உலர் உணவுப் பொதியை வழங்கினர்.
குறித்த பொதியில் தேங்காய், அரிசி, பருப்பு, மசாலாப் பொருட்கள், தானியங்கள், டின் மீன், நூடுல்ஸ் போன்றவை உள்ளடங்கியிருந்தன. முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு 641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனத் ஜயவர்தன அவர்கள் தனது பாராட்டை தெரிவித்தார்.
641 வது பிரிகேட் தளபதி, 641 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயனாளியின் வீட்டு வாசலுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் அந்த நிவாரணப் பொதி குறித்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு (ஒக்டோபர் 10) இராணுவ தினத்தன்று, 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இந்த குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.