24th July 2022 20:08:23 Hours
சமூக சேவை நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 52 ஆவது படைப்பிரிவின் 523 வது பிரிகேட்டின் 4 மற்றும் 7 வது விஜயபாகு காலாட் படையணி (VIR) படையினர் தமது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தின் மூலம் மேலும் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர். சாவகச்சேரி, சந்திரபுரத்தின் தகுதியான குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வீட்டினை கட்டுவதற்கு யாழ் குடாநாட்டின் 'சத்திய ஸ்ரீ' அமைப்பின் திரு V. மனோகரன் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு வழங்கிய நிதி உதவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பயனாளிகளின் அவல நிலையை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, இதற்கான அனுசரணையாளரைத் தேடுவதற்கான கூட்டு முயற்சிகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 52வது படைப்பிரிவு தளபதியினால் 523 வது பிரிகேட் தளபதியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன.
திருமதி நாகமணி சரஸ்வதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான புதிய வீட்டின் நிர்மாணப் பணிகள் 52 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் சில வாரங்களுக்குள் யாழ் தளபதியின் வழிக்காட்டல்களுக்கு அமைய நிறைவேற்றப்பட்டது. பொறியியல் மற்றும் மனிதவளத்திற்கான செலவு இல்லாததால் குடும்பத்திற்கு இராணுவப் படையினரால் அத்தியாவசியப் பொருட்களையும் பரிசாக வழங்க முடிந்தது.
வெள்ளிக்கிழமை (22) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, சமய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பிரதம அதிதியாக, அனுசரணையாளர்களின் பிரதிநிதிகள், 52 ஆவது படைப்பிரிவின் தளபதி, 523 வது பிரிகேட் தளபதி மற்றும் பயனாளியின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். நாடா வெட்டிய பிறகு புதிய வீட்டிற்கான சாவியை பயனாளி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சுருக்கமான வைபவத்தின் போது, புதிய வீட்டிற்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியினால் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், அந்தக் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்விக்குத் தேவையான எழுதுபொருட்களும் வழங்கப்பட்டது. சுப வேளையில் இந்து மத ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டன.
52 ஆவது படைப்பிரிவின் தளபதி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புதிய வீட்டைக் கட்டிய இராணுவத்தினர் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.