20th July 2022 16:45:00 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி பிரிகேடியர் மானத யஹம்பத் அவர்கள் புத்தல இராணுவப் போர்க் கல்லூரியின் 3 வது தளபதியாக திங்கட்கிழமை (18) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டதுடன், பிரதி தளபதியினால் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் அன்புடன் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அவரது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தையிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் தளபதி கல்லூரி வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்தார். அதற்கு முன்பாக அவர் பிரதான கேட்போர் கூடத்தில் அனைத்து படையினருக்கான உரை நிகழ்த்தினார், அங்கு கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து முக்கிய நியமனதாரிகளால் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அண்மையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா அவர்களுக்கு பதிலாக இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.