20th July 2022 17:30:00 Hours
இலங்கைப் பொறியியலாளர் படையணியின் பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன அவர்கள் செவ்வாய்க் கிழமை (19) இராணுவத் தலைமையகத்தில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் 3 வது பணிப்பாளராகப் பதவியேற்றார்.
மத அனுஷ்டானங்களுக்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர், தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
புதிய பதவியை பொறுப்பேற்ற நிகழ்வில் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் தளபதியாக பிரிகேடியர் அனில் பீரிஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன அவர்கள் தனது புதிய நியமனத்திற்கு முன்னர், பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரதி தளபதியாக கடமையாற்றினார்.