19th July 2022 17:00:56 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேட் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், 561 வது பிரிகேட் தலைமையகப் பகுதியைச் சூழவுள்ள மக்களின் பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு, கனகராயன்குளம் பகுதியில் குறைந்த வருமானம் பெறும் 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களைக் வழங்குவதற்காக தாமாகவே முன்வந்து நிதியுதவியை வழங்கினர்.
இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் ஒவ்வொன்றும் தலா ரூபா. 8000 மதிப்புள்ள பருப்பு, அரிசி, பால் மா, நூடுல்ஸ், மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டிருந்தன. இது சிவில் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு திட்டங்களில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டது.
56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே மற்றும் 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக ஆகியோர் இந்த திட்டத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கினர்.
16 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 17 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறித்த பயனாளிகளின் வீட்டு வாசலுக்குச் சென்று நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதில் இணைந்துகொண்டனர்.