18th July 2022 15:00:04 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை பொது சேவைப் படையணி தலைமையகம் வெள்ளிக்கிழமை (15) விசேட செயற்திட்டமொன்றை ஆரம்பித்து வைத்தது இதில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி இராணுவ வீரர்களின் 137 கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட மதிய உணவு மற்றும் குழந்தைகள் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகம் சத்தான மதிய உணவைத் தயாரித்து அவர்களை தலைமையகத்திற்கு அழைத்து வழங்கியத்துடன் அங்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் குழந்தை பிரசவத்திற்குப் பிறகு பயன்படுத்தக்கூடிய ஒரு குழந்தை தாங்கியை பரிசாக வழங்கியது.
முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரவீந்திர மீகமாராச்சியின் ஆலோசனையின் பேரில், அப் படையணி படைவீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் நிலையத்தளபதி கேணல் சசங்க பெரேரா, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.