18th July 2022 16:30:04 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேட் படையினர் இரு சட்டத்தரணிகளின் அனுசரணையில் வவுனியா பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 10 குடும்பங்களின் பொருளாதார சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை (07) நிதியுதவியினை வழங்கினர்.
இதன்படி, சட்டத்தரணிகளான மேஜர் எம்.எச்.எஸ்.ஸ்ரீ குமார மற்றும் அவரது மனைவி திருமதி.நதி குணரத்ன ஆகியோரின் நிதியுதவியுடன், பிரதேச கிராம உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன், இராணுவப் படையினர் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாவை வழங்கினர்.
56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.பி.பி குலதிலகவினால் மேற்பார்வையிடப்பட்டது. 561 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மற்றும் மேஜர் நிர்வாகம மற்றும் வழங்கல் அதிகாரி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.