16th July 2022 17:30:16 Hours
கடந்த திங்கட்கிழமை (11) காலை 6.30 மணியளவில் ஹப்புத்தளை முஸ்லிம் கல்லூரிக்கு அருகாமையில் வீதியில் குடைச்சாய்ந்த எரிபொருள் பவுசரை அகற்றுவதற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 2 வது (தொ) இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினர் உதவியுள்ளனர்.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபன அதிகாரிகளின் ஆதரவுடன் சில மணித்தியாலங்களில் எரிபொருள் பவுசரை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இராணுவப் படையினர் தீவிரமாக பங்களிப்பு செய்தனர்.
இரண்டு அதிகாரிகள் மற்றும் மூன்று டசின் இராணுவ சிப்பாய்களினால் இரண்டு மணித்தியாலங்களுக்குள் இந்த அவசர நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு பவுசர் கவிழ்ந்த வீதியின் போக்குவரத்தை சீர்செய்தனர்.
எவ்வாறாயினும் படையினரின் துரித நடவடிக்கையாலும் எரிபொருள் பவுசர் வீதிக்கு திரும்பியதாலும் கொட்டப்பட்ட பெருமளவான எரிபொருள் சேமிக்கப்பட்டு வீதியின் போக்குவரத்து வழமையாக ஆரம்பிக்கப்பட்டது.