15th July 2022 14:36:26 Hours
28 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய கெமுனு ஹேவா படையணியின் கேணல் எம்.ஏ.டி.ஆர் மங்கள ஆர்.எஸ்.பி. அவர்களுக்கு இராணுவத்தின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (13) மாலை களுத்துறை நாகொட மயானத்தில் அவரது இராணுவத் தோழர்கள் மற்றும் ஏனைய மக்களின் பங்குபற்றலுக்கு மத்தியில் இடம்பெற்றது.
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் ஏனையவர்கள் துக்கத்துடன் மறைந்த அதிகாரிக்கு மரியாதை செலுத்தினர்.
இராணுவ மரபுகளின்படி படையினர்கள் பூதவுடலை பெற்று, பேழைத் தாங்கும் துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியில் போர்த்தப்படுவதற்கு முன்பு மயான நுழைவாயிலுக்கு அருகில் மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயான பூமியின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை முறைப்படி பெற்றுக் கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயான பூமியை நோக்கிச் சென்றனர்.
இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை பகுதி 1, நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர்கள், இறந்தவருக்கு மரியாதை செலுத்தினர், மேலும் துப்பாக்கி மரியாதையும் வழங்கப்பட்டது, இது ஓர் இராணுவ அதிகாரி மறைந்தால் பெறக்கூடிய மிக உயர்ந்த இறுதி அஞ்சலியாகும்.
கடைசி நிமிடங்களுக்குப் பிறகு, நல்ல சிப்பாய் இப்போது அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி அழைப்புடன் பூத உடல் தகனத்திற்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட அவர்கள், கேணல் எம்.ஏ.டி.ஆர் மங்கள ஆர்.எஸ்.பி அவர்களின் புகழ்பெற்ற பணியின் போது ஆயுதப் படைகளில் ஒரு பொதுவான பாரம்பரியமாகப் பெற்ற அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மறைந்த கேணல் எம்.ஏ.டி.ஆர் மங்கள அவர்களின் இராணுவ இறுதிச் சடங்குகள் கெமுனு ஹேவா படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மறைந்த கேணல் எம்.ஏ.டி.ஆர் மங்கள 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாராட்டத்தக்க பங்கை ஆற்றினார்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட பகுதி 1 கட்டளை இங்கே பின்வருமாறு;