15th July 2022 14:28:35 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தை அழகுபடுத்துவதற்கான மற்றொரு செயற்திட்டமாக, லயன்ஸ் கழகம் 306-C1 பெருமளவிலான மரக்கன்றுகளை வழங்கியது.இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி வளாகத்தை பயிர்ச்செய்கைகளால் பசுமையாக்கும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் முயற்சியால் ஈர்க்கப்பட்ட, மாவட்ட ஆளுநர் லயன் காமினி குமாரசிங்க, உள்நாட்டு பழ மரக்கன்றுகளை வெள்ளிக்கிழமை (8) இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியிடம் கையளித்தார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தை பசுமை முகாமாக மாற்றும் வகையில், பசுமைத் தோட்டக்கலை பற்றிய விழிப்புணர்வோடு படையினரை ஒரே நேரத்தில் முழு வளாகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றும் நோக்குடன் இந்த செயற்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.பலா, ரம்புட்டான், வெரலி, மங்குஸ்தான் மற்றும் மா போன்ற மரக்கன்றுகளைப் பெறும் செயற்திட்டத்தின் இந்த மூன்றாம் கட்டத்தை இலங்கை இராணுவ தொண்டர் படையணி மேற்கொண்டது.
இத்திட்டத் தலைவர் மேஜர் (ஓய்வு) எல்.டி சமரதுங்க, முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் திரு. அமல் புஸ்ஸல்லகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ தொண்டர் படையணு சிப்பாய்கள் மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்ட 306C1 உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.