Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2022 12:10:52 Hours

இராணுவ விஷேட படையணி தலைமையகத்தினால் அனைத்து விஷேட படையணி முகாம்களுக்கும் விவசாய உற்பத்தி திட்டங்கள் விஸ்தரிப்பு

மாத்தளை, நாவுல, கொஹொலங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையக வளாகத்தினுள் முன்னெடுக்கப்படும் இராணுவத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு துணையாகவும், ஊக்குவிப்பதற்காகவும், வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விதைகளைப் பயிரிட்டு மேம்படுத்தும் வகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்திட்டம் திங்கட்கிழமை (4) இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, விசேட படையணி தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகளும் கலந்துரையாடி அனைத்து விசேட படையணி முகாம் வளாகங்களிலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து இந்த விவசாயச் செயற்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் விதைகளை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா 2022 மார்ச் 24 ஆம் திகதி விஷேட படையணி படைத் தளபதியாகக் கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் தற்போது இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியாகவும் பதவி வகித்துவருகிறார்.