06th July 2022 15:58:35 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 65 வது படைப்பிரிவின் 14 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, வெள்ளிக்கிழமை (01) துணுக்காய் 65 வது படைத் தலைமையகத்தில் நடந்த சமய சம்பிரதாயங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அங்கு வருகை தந்த புதிய படைப்பிரிவின் தளபதிக்கு, 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதன் பின்னர், பிரிவுத் தலைமையகத்தில் உள்ள பதவி நிலை அதிகாரிகளினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர், மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்கள் தனது அலுவலகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் ‘செத்பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில், தான் பதவியேற்றதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அதைத் தொடர்ந்து அடையாள சின்னமாக வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 65 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்கள் கலந்துகொண்டனர்.