05th July 2022 14:13:30 Hours
இராணுவம் மற்றும் அரச துறை ஆகிய இரண்டிற்கும் சார்பான விடயங்களில் நடைமுறை அறிவினை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சி பட்டறை 22 ஜூன் 2022 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக அதிகாரிகள் மற்றும் பல கணக்காய்வு அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் கணக்காய்வு பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுடன் கணக்காய்வு மற்றும் அவற்றின் நடைமுறைகள் பற்றிய அறிவினை பகிர்ந்து கொண்டனர்.