05th July 2022 14:11:30 Hours
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 22 வருடங்கள் சேவையாற்றி விரைவில் ஓய்வு பெறவிருக்கும் இராணுவத்தினர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று ஜூன் 20-25 ஆம் திகதிகளில் கலாஓயா இலங்கை இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் அவர்களுக்கு தொழில் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது. இத்திட்டமானது ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து வேலை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதினால் முன்னெடுக்கப்படுகிறது.
210 சிப்பாய்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர், மேலும் இது பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சமுதாயத்தில் தொழில் தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறைக்கு அவர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்ய முடியும் என்பது குறித்து விளக்கப்பட்டன.
இலங்கை இராணுவ தொழிற்பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்ஷ மற்றும் சில வளவாளர்கள் செயலமர்வை நடத்தினர்.