05th July 2022 14:06:30 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி யாழ். நகரிலுள்ள ஸ்ரீ நாக விகாரை மற்றும் யாழ். பேராயரின் இல்லத்திற்கு விஜயம் செய்த போது மகா சங்கத்தினர் மற்றும் யாழ். பேராயர் வண. கலாநிதி ஜஸ்டிவ் பி ஞானப்பிரகாசம் ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
மத அனுஷ்டானங்களின் பின்னர் வண. மீகஹா ஜந்துரே ஸ்ரீ விமலதேவ தேரர் தலைமையில் ஸ்ரீ நாக விகாரையில் மகா சங்கத்தினர் புதிய தளபதியின் அலுவலகத்திற்கு ஆசீர்வாதங்களைத் வழங்கினார். பின்னர், யாழ். பேராயர் ரெவ் டாக்டர் ஜஸ்டிவ் பி ஞானப்பிரகாசம் அவர்கள் மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்கள் புதிய அலுவலகத்தில் சுமூகமாக பணிகளை மேற்கொள்ள பிரார்த்தனை செய்தார்.