03rd July 2022 21:08:12 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 561 வது பிரிகேடின் கீழுள்ள 15 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்கள் ஜூன் 23 ஆம் திகதி விஞ்ஞானக்குளம் நவரத்னம் ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களுடன் கூடிய சில பெற்றோர்களும் சிரமதான பணியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு படையினர்கள் மதிய உணவு வழங்கினர்.
15 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சில அதிகாரிகளும் திட்டத்தில் கலந்து கொண்டனர்.