Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2022 21:29:51 Hours

யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் உணவுப் பாதுகாப்பை முன்னெடுப்பதற்கு பங்களிப்பு

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான வாழைகள், மரக்கறிகள் மற்றும் நெற் செய்கை போன்றவை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வெள்ளிக்கிழமை (01) இராணுவ உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பயிர்ச்செய்கை திட்டம் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் பங்களிப்புடன் தலைமையக வளாகத்தினுள் ஒரு ஏக்கர் காணியில் வாழை செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இராணுவ நெல் வயல்களில் நெற்பயிர் செய்கையும் தொடங்கப்பட்டன.