01st July 2022 11:00:16 Hours
'ஸ்ரீ சத்திய சாய்' அறக்கட்டளையின் அனுசரணையுடன் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 612 வது பிரிகேடின் 12 வது இலங்கைப் பொறியியலாளர் படையணி படையினர் மத்துகம மற்றும் மத்துகம ஸ்ரீ சாரானந்த பிரிவேன வெலிபென்ன பொதுப் பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு 100க்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொதிகளை செவ்வாய்க்கிழமை (28) வழங்கினர்.
மேற்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் பணிப்புரையின் பேரில், மத்துகம பிரதேச செயலகத்தின் கிராம சேவை அதிகாரிகள் மிகவும் தகுதியான குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சீனி, தேயிலை போன்றவை உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
விநியோகத்தின் போது 12 வது இலங்கைப் பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரி, அனுசரணையாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உடனிருந்தனர்.