30th June 2022 12:02:34 Hours
கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களிடையே பூப்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் 57 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ் அவர்களின் வழிகாட்டலில் பேரில் 57 வது படைப்பிரிவினர் பூப்பந்து பயிற்சி நிகழ்வை 28 ஜூன் 2022 அன்று கிளிநொச்சி மைதானத்தில் நடாத்தினர்.
இந்த பயிற்சியில் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள 6 பாடசாலைகளை உள்ளடக்கிய 77 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். திரு.கிருஷாந்த கொடஹேவா மற்றும் லெப்டினன் ஏ.பி.சி. கொடஹேவா பயிற்சிகளை வழங்கினர். 571 வது பிரிகேட் படையினர்கள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு செய்தனர்.
பயிற்சிகளின் இறுதியில், பங்குபற்றிய அனைவரும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதுடன், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் திரு.கிருஷாந்த கொடஹேவா அவர்களின் வழிகாட்டுதலுக்காக அவருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் தளபதி, 571, 572 மற்றும் 573 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.