21st June 2022 10:56:05 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் பங்கேற்புடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஞாயிற்றுக் கிழமை (19) கோலகலமான நிகழ்ச்சிகளுடன் தனது 26 வது ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடியது.
19 ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நிகழ்வில் உரையாற்றிய புதிய தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வரலாற்று நினைவுகளை நினைவுகூர்ந்ததுடன், படையினர்களின் பணிகளையும் , அர்ப்பணிப்புகளைப் பாராட்டியதுடன், யாழ் குடாநாட்டில் நிலவும் அமைதியான சூழலைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
படையினரின் ஒழுக்கத்தை உயர் தரத்தை பேணுமாறு படையினரிடம் வேண்டுகோள் விடுத்த அவர், படையினரின் நலன்களை கவனிப்பதாக உறுதியளித்தார்.
ஆண்டு நிறைவு தினத்தன்று வருகை தந்த தளபதிக்கு நுழைவாயிலில் 9 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையணியின் சிப்பாய்களால் பாதுகாவலர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு , யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்கள் மதிய உணவு விருந்திலும் இணைந்து கொண்டனர்.