21st June 2022 10:50:06 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 49 வது தளபதியாகப் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, அவர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, தனது திட்டங்களைச் செயல்படுத்தும் முகமாக, வெள்ளிக்கிழமை (17) அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் 'தனிப்பட்ட அபிவிருத்தி மற்றும் அனைத்து நிலையினருக்குமான ஊக்கம்' என்ற தலைப்பில் தனது முதல் விரிவுரையை நடத்தினார்.
அவர் தனது விரிவுரையில் பணியை நிறைவேற்றுவதற்கும், கடமைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் எளிய மற்றும் பயனுள்ள செயன்முறையான 'PACE' திட்டமிடல் தொடர்பில் கவனம் செலுத்தினார். தொழில்முறை மற்றும் இராணுவ வாழ்க்கையின் வெற்றிக்கு முதன்மை, மாற்று, தற்செயல் மற்றும் அவசரகால திட்டமிடல் மூலம் அத்தகைய திட்டத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்த விரிவுரையில் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.