21st June 2022 10:15:48 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 593 வது பிரிகேடினரின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும், தென்பகுதி தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை வண. தலகல சுமனரதன நாயக்க தேரர் மற்றும் சிங்கப்பூர் டென் நாக் பூய் மற்றும் மெங் லெங் வரையறுக்கப்பட்ட அமைப்பு (Tan Ngak Buay & Meng Lang Foundation Limited.) கொக்கிளாய் பிரதேசத்தின் 400 குடும்பங்களுக்கு 400 உலர் உணவுப் பொதிகள் ஜூன் 14ஆம் திகதி கொக்கிளாய் அரச தமிழ் கலவன் பாடசாலைக்கு பயனாளிகளை வரவழைத்து விநியோகித்தனர்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அவர்களின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்குறித்த அறக்கட்டளையால் இந்த திட்டத்திற்கான அனுசரணை வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் நடைபெற்றது. 59 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 593 வது பிரிகேட் தளபதியும் விநியோகத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.