21st June 2022 10:40:21 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவினரின் ஆதரவுடன் கண்டி புற்றுநோய் அமைப்பு, பழங்குடி சமூகத்தினரின் நலனுக்காக வியாழன் (16) அன்று தம்பானையில் வைத்திய முகாமொன்றை நடாத்தியதோடு, 150 உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.
5 மருத்துவ உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் அதனைச் சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்த படையினர் அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இலவசமாக விநியோகித்தனர்.
கண்டி புற்றுநோய் சங்கத்தின் தலைவர் திரு மொஹான் சமரநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்திட்டத்தில் இணைந்திருந்தனர்.