21st June 2022 10:36:17 Hours
53 வது படைப்பிரிவின் 532 வது பிரிகேட் படையினர், பொசன் பௌர்ணமியை தினத்தை முன்னிட்டு 'யுதுகம' தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன், 14 ஜூன் 2022, திகதி பொசன் போயா தினத்தன்று தெஹியத்தகண்டி, மாவனகம பிரதேசத்தில் வசிக்கும் 15 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
532 வது பிரிகேட் தளபதி கேணல் எஸ்.பி விக்ரமசேகர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வுக்கான அனுசரணை வழங்கப்பட்டது.
532 வது பிரிகேட் தளபதி, 532 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அனுசரணையாளர்களின் பிரதிநிதிகளுடன் விநியோக நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.