Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2022 18:30:14 Hours

மத்திய பாதுகாப்பு படையினர் படல்கும்புர பிரதேச ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்காவில் வசிக்கும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவனான திரு அனுக் அவர்களின் அனுசரணையினை கொண்டு, படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் 12 ஜூன் 2022 அன்று படல்கும்புர கலாச்சார மண்டபத்த்தில் வைத்து வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் தலைமையில், 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர் அந்த நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதற்கு உதவினர். இத்திட்டத்தின் போது கிராம சேவை அதிகாரிகளும் இதன் போது உடனிருந்தனர்.