16th June 2022 09:30:43 Hours
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21வது படைப்பிரிவின் 7 வது இலங்கை சிங்கப் படையணியினரால் 2022 ஜூன் 4ஆம் திகதி போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில், மினிமுத்து அபிவிருத்திச் சங்கத்தினால் இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இரத்ததானத் திட்டத்தை நடத்துவதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கு அவசியமான பங்களிப்பை வழங்கி படையினர் இரத்த தானம் வழங்கியோருக்கு மதிய உணவு பொதிகள் மற்றும் தேநீர் விருந்துபசாரமும் வழங்கினர்.