14th June 2022 17:30:28 Hours
இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்கள் வெள்ளிக்கிழமை (03) இராணுவத்தின் ஆளணி வள நிர்வாக பணிப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேஜர் ஜெனரல் உதய குமார அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள 51 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் பெற்றுள்ள நிலையிலேயே பிரிகேடியர் கொடிதுவக்கு அவர்கள் மேற்படி நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் மங்கள விளக்கேற்றி வைக்கும் நிகழ்வின் பின்னர் மத அனுட்டானங்களில் ஈடுபட்டார்.
அதனையடுத்து, மகா சங்கத்தினரின் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு அவசியமான உத்தியோகபூர்வ ஆவணங்களில் அவர் கையொப்பமிட்டார்.
பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு புதிய நியமனத்தை பொறுப்பேற்கும் முன்னதாக 613 வது பிரிகேட் தளபதியாக நியமனம் வகித்தார்.