14th June 2022 17:45:01 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக புதிதாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள, மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (12) யாழ். பாதுகப்பு படைத் தலைமையக வளாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு மத்தியில் பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தளபதியவர்கள் வருகை தந்த போது நுழைவு வளாகத்தில் அவருக்கு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியல் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதற்காக தளபதியவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது பௌத்த பிக்குகளின் செத் பிரித் பாராயணங்கள் மற்றும் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களின் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்ட தளபதியவர்கள், போரில் உயிர்நீத்த யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வீரர்களின் நினைவுச் சின்னத்தில் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதனையடுத்து இடம்பெற்ற படையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு படையினருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர மேற்படி நியமனத்தை ஏற்கும் முன்னதாக இராணுவத்தின் தலைமை கள பொறியாளராக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது கொஸ்கமவிலுள்ள இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களுக்கு பதிலாக இவர் இக்குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.