14th June 2022 17:24:24 Hours
யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள 51 வது படைப்பிரிவு தலைமையகத்தில் சனிக்கிழமை (04) இடம்பெற்ற இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவான நிகழ்வின் போது, 51 வது படைப்பிரிவின் 30 வது தளபதியாக நியமனம் வகித்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் கடமையிலிருந்து விடுகை பெற்றுக்கொண்டார்.
விடுகைபெறும் தளபதியவர்கள் நுழைவு வளாகத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் 14 வது கஜபா படையணியினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.