12th June 2022 19:00:58 Hours
இலங்கைப் பொறியியலாளர் படையணியின் மேஜர் ஜெனரல் உதய குமார அவர்கள் செவ்வாய்க்கிழமை (7) கோப்பாயில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிவு தலைமையகத்தின் 31வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது புதிய தளபதி அவர்களை பதவி நிலை அதிகாரிகளால் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, 10 வது இலங்கை பீரங்கிப் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து புதிய தளபதியவர்கள் தமது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் தனது பதவியேற்பின் நினைவம்சமாக மேஜர் ஜெனரல் உதய குமார அவர்களினால் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 51 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரையொன்றை நிகழ்த்திய அவர், தனது அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
மேஜர் ஜெனரல் உதய குமார அவர்கள் புதிய நியமனத்தை பெற்றுகொள்வதற்கு முன்னதாக இராணுவ தலைமையக மனிதவள நிருவாக பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமனம் வகித்தார்.
இந்நிகழ்வில், பிரிகேட் தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், 51 வது படைப்பிரிவு தளபதியவர்கள் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.