05th June 2022 19:01:04 Hours
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை சமிக்ஞை அதிகாரியாக (CSO) மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் வெள்ளிக்கிழமை (3) இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மத அனுஷ்டானங்கள் மற்றும் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் லலித் ஹேரத் இலங்கையின் சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரதித் தளபதியாக நியமனம் வகித்தார்.
அவர், மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.