03rd June 2022 11:34:43 Hours
மத்திய பாதுகாப்புப் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, கனடாவிலுள்ள இலங்கை வர்த்தகர்கள் வழங்கிய நிதியுதவியை கொண்டு, பண்டாரவளை, பூனாகலை கிரெக் தோட்டத்தில் வசிப்பவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு இலவச உலர் உணவு பொதிகள் படையினரால் விநியோகிக்கப்பட்டன.
பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5000.00 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் கீரி சம்பா அரிசி, பெரிய வெங்காயம், பருப்பு, உப்பு, மிளகாய்த் தூள், பூண்டு, டின் மீன் மற்றும் சோயா என்பன அடங்கியிருந்ததோடு, அவை மே மாதம் 26 ம் திகதி வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் மற்றும் 12 வது படைப்பிரிவு படையினரின் ஏற்பாட்டில் தோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தலைமை சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஏனைய அதிகாரிகள் மற்றும் படையினர் மற்றும் பூனாகலை கிரெக் தோட்டத்தின் அத்தியட்சகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.