02nd June 2022 21:19:08 Hours
ஓய்வு பெறுவதற்கு முன்னதாக விடுமுறையில் இருந்த இலங்கை சிங்கப் படையணியின் கேணல் எச்.எஸ் ரத்நாயக்க அவர்கள் தனது 56 வயதில் சுகவீனமுற்றிருந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 1) திடீரென காலமானார்.
அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் கண்டியில் உள்ள 11 வது படைப்பிரிவு தலைமையகத்தில் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரியாக (தொண்டர் பணிகள்) பணியாற்றினார். அவரது பூதவுடல் தற்போது கண்டி, பழைய கந்தோட்ட வீதி, இல 8/89 இல் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் பூரண இராணுவ மரியாதையுடன் சனிக்கிழமை (4) பிற்பகல் 12.30 மணியளவில் கண்டி மஹய்யாவ பொது மயானத்தில் நடைபெறும்.