Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2022 17:50:54 Hours

வாழ்த்துக்களுக்கு மத்தியில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி அலுவலகத்தின் பதவி நிலைப் பிரதானி ஓய்வு

இராணுவத்தில் 34 வருடங்களுக்கும் மேலாக முன்னுதாரணமான சேவையாற்றி ஓய்வுபெறவிருக்கும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதான் அலுவலகத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க, அவரது குடும்பத்தாருடன் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை (30) அழைக்கப்பட்டிருந்தார்.

இச் சந்திப்பின் போது, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி சிரேஷ்ட அதிகாரி பல்வேறு நியமனங்களின் கீழ் ஆற்றிய நேர்மையானதும் அர்பணிப்பு மிக்கதுமான சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரியான இவர் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி அலுவலக பதவி நிலைப் பிரதானி நியமனம் பெறுவதற்கு முன்னதாக பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.

வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியுடனான கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி, இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் மேற்படி அதிகாரியின் பிள்ளையிடம் கலந்தாலோசித்து அவர்களது கல்வி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி, தனது சேவைக்காலத்தில் இராணுவ தளபதியிடமிருந்து தனக்கு கிடைக்கபெற்ற ஒத்துழைப்புகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் நிறைவம்சமாக ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதவி விலகும் மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.