Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2022 17:38:10 Hours

ஓய்வுபெறும் இராணுவ செயலாளருக்கு வாழ்த்து

இராணுவ தலைமையகத்தின் செயலாளராக நியமனம் வகித்த இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி 34 வருட இராணுவ சேவையை நிறைவு செய்துகொண்டு ஓய்வுபெறவுள்ளமையைிட்டு குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை (30) அழைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரியின் அர்பணிப்பு மற்றும் உறுதியான சேவைக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஒரு வருடத்திற்கும் மேலாக இராணுவச் செயலாளராக அவர் ஆற்றிய பணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.இதன்போது, இராணுவச் செயலாளராக அவர் நடைமுறைப்படுத்திய விடயங்கள் இராணுவத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் அமைந்திருந்தன என்றும் இராணுவ தளபதியவர்கள் சுட்டிக்காட்டினார்.

பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தனது பதவிக்காலத்தில் இராணுவ தளபதியவர்கள் வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளுக்கும் நன்றி தெரிவித்த அவர் புதிய பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுள்ளமையையிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் நிறைவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பந்திரி அவர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இந்நிகழ்வி்ல் திருமதி கொலம்தந்திரி மற்றும் மிளாகிரியவிலுள்ள புனித போல்ஸ் கல்லூரியில் பயிலும் அவரது மகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.