30th May 2022 17:41:18 Hours
மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த அவர்கள் 23 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்த நிலையில் 34 வருடகால இராணுவ சேவையை நிறைவு செய்துகொண்டுள்ள ஓய்வுபெறுவதையிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையக அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) சந்தித்தார்.
இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைப்பிக்கப்பட்டிருந்த ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தளபதி தெரிவித்தார்.பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், அவரது புகழ்மிக்க இராணுவ சேவைக்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், பல்வேறு நியமனங்களின் கீழ் அவரது அர்ப்பணிப்பான வகிபாகம் தொடர்பிலும் நினைவுகூர்ந்தார். மேலும், நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் அவர் ஆற்றிய இராணுவ சேவை தொடர்பிலும் கலந்துரையாடினார்.
விஜயபாகு காலாட்படை படையணியின் சிரேஷ்ட அதிகாரியான இவர் பதவிக்காலத்தில் 23 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு இராணுவத்தின் பல முக்கிய நியமனங்களைச் வகித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட தளபதியவர்கள், அவரது குடும்பத்தினருடனும் தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெறும் அதிகாரியின் பிள்ளைகளுடன் கலந்துரையாடி அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததோடு, சந்திப்பில் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.அதனையடுத்து ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி தனது சேவைக்காலத்தில் இராணுவ தளபதியின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
சந்திப்பின் நிறைவில், ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த அவர்களுக்கான நினைவு பரிசொன்றை வழங்கிவைத்த பின்னர் அவரது குடும்பத்தாருக்கு விஷேட நினைவு பரிசுகளையும் வழங்கிவைத்தார்.