30th May 2022 17:43:46 Hours
35 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வுபெறும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் வந்தித மஹிங்கந்த தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை (30) அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இவர் வகித்த பதவிகளின் கீழ் ஆற்றிய ஆர்பணிப்புடன் கூடிய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்த அதேவேளை, அவரது நம்பிக்கை மற்றும் நேர்மையான சேவைக்கும் பாராட்டு தெரிவித்தார். இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரியான இவர் தனது பதவிக் காலத்தில், வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதியின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவும் பல முக்கிய நியமனங்களைச் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துக் கொண்ட தளபதியவர்கள், அவரது குடும்பத்தினருடனும் தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெறும் அதிகாரியின் பிள்ளைகளுடன் கலந்துரையாடி அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததோடு, சந்திப்பில் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் வந்தித மஹிங்கந்த, இராணுவத் தளபதியிடமிருந்து தனது கடமைகளில் பெற்ற ஊக்குவிப்பையும் குறிப்பிட்டதுடன், இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் விவேகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
கலந்துரையாடலின் நிறைவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் வந்தித மஹிங்கந்த அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசொன்றை வழங்கிய அதேநேரம் அவரது குடும்பத்தினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.