28th May 2022 17:56:31 Hours
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டலுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவினர் தெல்தெனிய ரங்கல தோட்டத்தில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளின் நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
மேற்படி பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 19 வீடுகளின் நிர்மாண பணிகளை முழுமைப்படுத்துவதற்கு அவசியமான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி உதவிகளை குறித்த பகுதியில் வசிக்கும் நன்கொடையாளரான திரு ஸ்ரீ மோகன சங்கர் அவர்கள் வழங்கியிருந்தார்.
இராணுவத்தின் “முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” க்கு அமைவாக 111 மற்றும் 112 பிரிகேடினர் ஒன்றிணைந்து வீடுகளின் நிர்மாண பணிகளை முன்னெடுத்தனர்.
மேற்படி வீடுகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு திரு. ஸ்ரீ மோகன சங்கர் மற்றும் 111 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, 112 பிரிகேட் தளபதி கேணல் சந்திம குமாரசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கிய படையினர், வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.